சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அவர் மீண்டும் அமைச்சராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அவதூறு வழக்கில் ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தப்பட்டதால், மீண்டும் அவர் எம்.பி ஆனார். அதேபோல், பொன்முடியும் பதவியில் தொடருவார் எனத் தெரிகிறது.
இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியினர் பெருமிதம் கொண்டுள்ளனர்.