சென்னை அண்ணா சாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.
சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்ற அவரை காண ரசிகர்கள் அலைமோதினர். ஆடி காரில் வந்திருந்த அவர், காரை வெளியே கொண்டுவர முடியாமல் கூட்ட நெரிசலால் சிக்கி தவித்தார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், அங்கிருந்த ஆட்டோவில் அவர் புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.