சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீசார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதால், தீவிரவாத பின்னணி ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.