அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தீவிரமாக ஈரான் மேற்கொண்டுவருவதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேசிய அதன் இயக்குநர் ரபேல் குரோஷி, “பிப்ரவரியில் 20.06 கி.கி., இருந்த ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் நிலை தற்போது 142.1 கி.கி அளவுக்கு 60% உயர்ந்துள்ளது.
இந்த செயல் அணு ஆயுதம் தயாரிப்புக்கு நிகரானது” எனக் கவலை தெரிவித்தார்.