அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்திய மாணவர்கள் சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இதனால் ஏற்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள் கிளீவ்லாந்தில் படித்து வந்த உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
அவரது மரணத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.