பொறியியல் படிப்பில் சேர ஒரே நாளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.
இதையடுத்து, உயர்கல்விக்கு மாணவ- மாணவியர் விண்ணப்பிக்க ஏதுவாக இன்று காலை முதல் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி 20,097 பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.