தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலமோசடி வழக்கில் ஜன.31இல் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கைகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.