சிவகார்த்திகேயனின் 25ஆவது படத்தை, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அதன்பின், ‘டான்’ பட இயக்குநர் சிபி உடன் இணையும் அவர், பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம், அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.