பாடல்களுக்கான காப்புரிமைத் தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பாடல் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய பாடலாசிரியர் சினேகன், தனது உரிமைக்காக இளையராஜா போராடி வருவதாகத் தெரிவித்தார்.
கவிஞருக்கு எப்படி எழுத்து முக்கியமோ, அதுபோல் இசையமைப்பாளருக்கு இசை முக்கியம் எனத் தெரிவித்த அவர், தன்னை ஒரு பக்க சார்பாளராகக் காட்ட முயற்சிக்க வேண்டாம் என்றார்.