இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருப்பூர் மாவட்டம் மாதப்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்… என் மக்கள்’ யாத்திரையின் நிறைவுக் கூ ட்டத்தில் பங்கேற்கிறார். இன்று மதியம் 2:06 மணிக்கு கோவை சென்றடைவார் . அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2:10 மணிக்கு பல்லடம் வருக்கிறார் .
பின்னர் மதியம் 2:45 மணிக்கு மாதப்பூரில் ‘‘என் மண்… என் மக்கள்’ பொதுக்கூட்டங்களில் பங்கேற்று ” பேசுகிறார் . அவருக்காக தாமரை வடிவ மேடை தயார் செய்யப்பட்டு, ஐந்து லட்சம் பேர் அமரக்கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்லடத்தில் இருந்து மாலை 3:50 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மாலை 5:05 மணிக்கு மதுரை வந்தடைவார் .
மாலை, 5:15 மணிக்கு, மதுரை டி.வி.எஸ்.லட்சுமி பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் அமலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சி முடிந்து மாலை 6:45 மணிக்கு பசும்மலை மதுரை சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு செல்கிறார். பின்னர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் . அதன்பின், நாளை காலை 8:40 மணிக்கு ஹெலிகாப்டரில் தூத்துக்குடி செல்கிறார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமின்றி பல்வேறு சமூக நிகழ்ச்சிகளை கலந்துகொண்டு நெல்லையில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.