இந்தியாவில் பிறந்த கோபி தோட்டகுரா என்ற விமானி, சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து இரவு 9.35 மணியளவில் ப்ளூ ஆர்ஜினின் சுற்றுலா விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
அதில் பயணித்த 6 பேர் கொண்ட குழுவில், ஆந்திராவின் விஜயவாடாவில் பிறந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த கோபியும் ஒருவராவார்.