2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலான சோலார் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் ரூ.2.3 லட்சம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், தற்போது 10.93 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது.
இதை 2030ஆம் ஆண்டுக்குள் 45 ஜிகாவாட்டாக அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.