Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்உணவுபூசணிக்காய் சூப்

    பூசணிக்காய் சூப்

    உணவுப் பழக்கத்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சரியான தீர்வு பூசணி சூப் ஆகும். உடல்நலப் பிரச்சனைகளுக்குக் காரணம் நமது புதிய உணவுப் பழக்கம்தான். வயிற்றுப்புண்ணால் பாதிக்கப்படுவது இளைஞர்கள்தான். அதிக உப்பு மற்றும் துரித உணவுகள் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தி அசௌகரியத்தை ஏற்படுத்தும். சரியான தீர்வு பூசணி சூப்!

    தேவையான பொருட்கள்

    பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்,

    வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை – சிறிதளவு,

    பால் – ஒரு டம்ளர்,

    மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,

    பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4,

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சூடாக்கி, வெங்காயம் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது வதக்கி இறக்கவும்.

    பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு பூசணிக்காயை மட்டும் ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். வேகவைத்த தண்ணீரில் அரைத்த கூழ் கலக்கவும். பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து பரிமாறவும்.

    இதனால் கிடைக்கும் பலன்கள்

    சிறுநீரகப் பிரச்சனைகள், கல் அடைப்புகள் நீங்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் அருந்தலாம். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments