Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்நீலகிரியில் நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

    நீலகிரியில் நடனமாடி மகிழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக நேற்று உதகைக்கு சென்றார். இதையடுத்து இன்று உதகை தலைகுண்டா அருகே முத்தநாடு தோடர் கிராமத்திற்கு வந்த ஆளுநரை தோடர் பழங்குடியினர் பாரம்பரிய உடை அணிந்து வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து தோடர் பழங்குடியினரின் குலதெய்வத்தின் பாரம்பரிய கோவிலுக்குச் சென்ற ஆளுநர், அதன் சடங்குகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது தோடர் பழங்குடியின இளைஞர்கள் ஆளுநரின் முன் ஒரு சிறிய கல்லை எழுப்பினர். பின்னர், மாணவர்கள் மற்றும் தோடர் பழங்குடியினருடன் ஆளுநர் கலந்துரையாடினார். இதையடுத்து தோடர் பழங்குடியினரின் பாரம்பரிய நடனத்தை கண்டு கவர்னர் பழங்குடியினருடன் நடனமாடினார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments