வரும் லோக்சபா தேர்தலில், “பாஜக 370 தொகுதிகளில் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி மொத்தம் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்” என்று மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசினார். மத்திய பிரதேசத்தில் ரூ. 7,750 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, மத்திய பிரதேச மாநில மக்களின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைத்து வருகிறோம். இரட்டை விதி இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்கிறது.