Friday, July 26, 2024
More
    Homeலைப் ஸ்டைல்தைவான் தம்பதிக்கு இந்து முறைப்படி திருமணம்!

    தைவான் தம்பதிக்கு இந்து முறைப்படி திருமணம்!

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சித்தர்புரத்தில் காவலயம் சித்தர்பீடம் உள்ளது. இந்தச் சிறப்புமிக்க சித்தர் பீடத்தில் ஒவ்வொரு பௌர்ணமியும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் என பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.

    இந்நிலையில் தைவான் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் மற்றும் ஆசிரியர் ருச்சென் ஆகியோர் சித்தர் பீடத்திற்கு வந்தனர். இருவரும் காதலித்து ஏற்கனவே தைவானில் திருமணமானவர்கள். இதையடுத்து இருவரும் இந்து முறைப்படி இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

    அதன்பிறகு தமிழகம் வந்த இருவரும் இன்று தமிழ் முறைப்படி அம்மி மிடி, அருந்ததி, பாதபூஜை முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments