500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற புதிய சாதனையைப் படைத்த பிறகு குடும்ப அவசரநிலை காரணமாக அஸ்வின் சென்னை திரும்பினார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சாக் க்ரோலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றார்.
தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பிசிசிஐ, “குடும்ப நெருக்கடி காரணமாக இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியுள்ளார். இந்த சவாலான காலங்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அணியும் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.