தெற்கு கொல்கத்தாவில் உள்ள மெடியாப்ரூஸ் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.