தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290ஆக உள்ள நிலையில், ஏப்.1 முதல் 319ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இதற்காக 1229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம் உயர்த்தப்படும் என மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.