Friday, July 26, 2024
More
    Homeமுக்கிய செய்திரூ.1000…. 333 என்று தொடங்கும் எண்ணை டைப் செய்யுங்க….தமிழக அரசு புது அறிவிப்பு….!!!!

    ரூ.1000…. 333 என்று தொடங்கும் எண்ணை டைப் செய்யுங்க….தமிழக அரசு புது அறிவிப்பு….!!!!

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளிருக்கான ரூ.1000 உதவித்தொகை
    திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கலைஞர்
    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம்
    நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு
    வருகிறது. எனினும் சிலருக்கு இந்த எஸ்எம்எஸ் வரவில்லை என்று
    கூறப்படுகிறது. அப்படி எஸ்எம்எஸ் வராதவர்கள் இதற்காக பிரத்யேகமாக
    உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு சென்று தங்களது ஆதார்
    எண்ணை உள்ளீடு செய்து பணம் கிடைக்காததற்கான விவரத்தை தெரிந்து
    கொண்டு உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என
    தெரிவிக்கப்பட்டது.
    இந்நிலையில் ரேஷன் கார்டு எண்ணை கொடுத்து மகளிர்
    உரிமைத்தொகை விண்ணப்பம் நிலவரத்தை பார்க்கும் வசதி அறிமுகம்
    ஆகி இருக்கிறது. https://kmutappeal.tnega.org/-ஐ கிளிக் செய்தால் குடும்ப
    அட்டை எண் கேட்கும். பின் ஸ்மார்ட் கார்டில் புகைப்படத்தின் கீழ் உள்ள
    333 என தொடங்கும் எண்ணை அதில் டைப் செய்து ‘சமர்பிக்க” என்ற நீல

    நீற பட்டனை அழுத்தினால் உங்கள் விண்ணப்ப நிலவரம் தெரிந்துவிடும்.
    எந்த தடங்கலும் இல்லாமல் இந்த இணையதளம் வேலை செய்கிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments