நிதிரீதியாக காங்கிரஸை முடக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடி
ஈடுபட்டிருப்பதாக சோனியா குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “நிதி ரீதியாக காங்கிரஸை முடக்கும் முயற்சியில் மோடி ஈடுபட்டுள்ளார். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி முடக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளில் இருந்து பணம், வலுக்கட்டாயமாக எடுக்கப்படுகிறது. இது காங்கிரஸை மட்டுமல்ல நாட்டின் ஜனநாயகத்தையும் பாதிக்கும்” என்றார்.