முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி தமிழக பா.ஜ.க தலைவர்
அண்ணாமலை பேசியது பாஜக -அதிமுக கூட்டணியில் சலசலப்பை
ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக பாஜக
உடன் கூட்டணி முறிவு என அதிமுக தலைமை நேற்று அதிரடியாக
அறிவித்தது. மேலும் பொதுவெளியில் பாஜகவை கடுமையாக விமர்சிக்க
வேண்டாம் என்றும் தலைமையால் அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு
யாரும் ஊடக விவாதங்களில் பங்கேற்கக்கூடாது எனவும் அதிமுக
அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அண்ணாமலை தலைமையில்
கட்சியை பலப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாக பாஜக
முன்னாள் தேசிய தலைவர் சிடி ரவி கூறியுள்ளார். மேலும் அதிமுக-பாஜக
கூட்டணி முறிவு குறித்து ரவி பேசியதாவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு
இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இந்த காலகட்டத்துக்குள் என்ன
நடக்கும் என்று சொல்ல முடியாது. அதோடு கட்சியை பலப்படுத்துவது
என்பது ஒவ்வொரு நிர்வாகியின் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.