
அதில், அலிபிரி நடைபாதை வழியாக திருமலைக்கு நடந்தே வரும் பக்தர்களுக்கு மீண்டும் இலவச டோக்கன்கள் (Divya Darshan Tokens) வழங்கப்படும். இந்த நடைமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும். அலிபிரி நடைபாதை வழியாக வருவோருக்கு நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு வருவோருக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் வழங்கப்படும்.
மேலும் கோடை விடுமுறையை ஒட்டி அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் வகையில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படும். ஏப்ரல் 15 முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவானி, சுற்றுலா இடஒதுக்கீடு, ஆன்லைன் சேவை, 300 ரூபாய் தரிசன டிக்கெட் உள்ளிட்டவை சற்றே குறைக்கப்படும்.