
பான்-ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு இன்னும் 4 நாட்களில் முடிய உள்ளது. மார்ச் 31, அதற்குள் இந்த இரண்டு முக்கிய ஆவணங்களும் இணைக்கப்படாவிட்டால், உங்கள் நிரந்தர கணக்கு எண் அல்லது பான் ஏப்ரல் 1 முதல் செயலிழந்துவிடும். அதுமட்டும் இல்லாமல் அரசாங்கத்திற்கு கூடுதல் வரியை நீங்கள் செலுத்த வேண்டும்.
ஆச்சரிய பட வேண்டாம். இது உண்மை தான். மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின்( CBDT) மார்ச் 30, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, "PAN செயல்படாத நிலையில் வைத்திருப்பவர்கள் அரசுக்கு அதிக விகிதத்தில் வரி கட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. நீண்ட நாட்களாக பான்- ஆதார் இணைப்புக்கு காலக்கெடு கொடுத்து வரும் நிலையில் ஏப்ரல் 1 முதல் இது கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.