
மேலும் அவர் சட்டப் பேரவையில் அரசுப் பணிகளில் அவுட் சோர்சிங் மூலம் ஆள்களை நியமிப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
“சில விஷயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். டிஎன்பிஎஸ்சியை பல வகைகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். மூன்று ஆண்டுகள் தேர்வே நடத்தப்படவில்லை. அதற்கு முன் நடத்திய சில தேர்வுகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே மனிதவள சீர்திருத்தக் குழுவை உருவாக்கி தேர்வு செய்ய வேண்டும் என்று இதற்கு முன் கூறினேன் எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.