
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை டென்னிஸ் போட்டிகளில் இருந்து கண்ணீர் மல்க விடைபெற்றார். இதையொட்டி, அவரது சொந்த ஊரான தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விழா நடத்தப்பட்டது. இதில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற துபாய் ஓபன் டென்னிஸ் தொடருடன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சானியா அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தனது கடைசி டென்னிஸ் போட்டியி சக நாட்டு வீரர் ரோஹன் போபன்னா, அமெரிக்காவின் பெதானி மாடக், குரோஷியாவின் இவான் டோடிக் ஆகியோருடன் இணைந்து சானியா விளையாடினார். இந்த போட்டியில் சானியா – போபன்னா இணை வெற்றி பெற்றது. சானியா விளையாடிய இந்த கடைசி போட்டியை மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு, தெலங்கானா அமைச்சர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அசாருதீன், யுவராஜ் ஆகியோருடன் சானியாவின் குடும்பத்தினர் நேரில் கண்டு ரசித்தனர்.