
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தே பணி செய்யும் வசதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வசதியால், பணியாளர்கள் நாளொன்றுக்கு சராசரியாக 72 நிமிடங்கள் மிச்சப்படுத்தியாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
முன்னதாக, 'National Bureau of Economic Research' என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், "வீட்டில் இருந்து பணி செய்யும் போது ஏற்படும் சேமிப்பு" (TIME SAVINGS WHEN WORKING FROM HOME) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டனர்.