
நாற்பது, ஐம்பது மற்றும் அறுபதுகளில் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் பலரும் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களாக இருந்தனர். வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன், கப்பலோட்டியத் தமிழன் படங்களை இயக்கிய பி.ஆர்.பந்துலு ஒரு தெலுங்கர்.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் படம் இயக்கத் தொடங்கிய சாணக்யாவும் அடிப்படையில் ஒரு தெலுங்கர். 1956 இல் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி நடிப்பில் வெளிவந்த காலம் மாறிப் போச்சு, ஜெமினி கணேசன், சாவித்ரி நடிப்பில் 1960 இல் வெளியான புதிய பாதை ஆகியவை இவர் இயக்கியவை.