
பதான் வெற்றியை தொடர்ந்து ஜவான் படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணையவிருக்கிறார் ஷாருக்கான்.
பதான் படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைத்துள்ளார் ஷாருக்கான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்குடன் இணைந்து, தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியாவில் 100 கோடி ரூபாயை எளிதில் தாண்டியுள்ளது. பதான் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இயக்குனர் அட்லீ குமாரின் வரவிருக்கும் படமான ஜவான் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளளார் ஷாருக்கான்.