
தமிழ்நாட்டில், பெருவாரியான அரசு பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமே நிரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்புகிறது. அதேபோன்று, அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியமும், மருத்துவத் துறை சார்ந்த பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையமும் தேர்வு செய்து வருகின்றன.
பொருளாதாரத்தில் ஏற்படும் வளர்ச்சிப் போக்கு, அரசாங்க மனிதவள கொள்கைகள் மற்றும் நிதிச் சுமை ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு இந்தாண்டு ஆசிரிய பட்டதாரிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கு முன்வந்திருப்பதாக தெரிகிறது.