
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சில தினங்களுக்கு மாரடைப்பால் அவர் உயிரிழந்ததால் இடைதேர்த்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரசுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
தற்போது அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் மறைந்த திருமகன் ஈவெராவின் மனைவி பூர்ணிமா அல்லது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட கடைசிகட்ட ஆலோனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த முறை தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.