
கூகுள் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்படுவதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் (CCI ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி உத்தரவிட்டது.
இரண்டு வெவ்வேறு வழக்குகளில் கூகுளுக்கு அபராதம் விதித்தது . ஆண்ட்ராய்டு கைபேசிகள் தொடர்பான வர்த்தகத்தில் முறைகேடாக செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. மேலும் பிளே-ஸ்டோர் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது. அதனை இரண்டு மாதங்களுக்குள் செலுத்துமாறு கூகுளுக்கு உத்தரவிட்டது.